Pages

செவ்வாய், 23 அக்டோபர், 2012

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா கொண்டாட்டம் - படத் தொகுப்பு


சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழாக் கொண்டாட்டம்



சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினர் ஏற்பாடு செய்த மாபெரும் சமயப் பேரணியும் பொதுக்கூட்டமும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00 மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 



புதன், 17 அக்டோபர், 2012

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்ததின விழா 
அழைப்பிதழ்

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னம்பிட்டி ஸ்வயம் சேவக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் எதிர்வரும் 19.10.2012 அன்று (வெள்ளிக் கிழமை) காலை 9.00   மணிக்கு மனம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது


இவ்விழாவிற்கு உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைக்கின்றனர்.

வியாழன், 4 அக்டோபர், 2012

“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா - படத்தொகுப்பு


“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா




 “ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” என்னும் தொனிப் பொருளில்  எமது பாடசாலை(பொல/ மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய ) அதிபர், ஆசிரியர்கள் ஒழுங்கு செய்த “சிறுவர் தினக் கொண்டாட்டம்”  03.10.2012 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்குப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.


திங்கள், 1 அக்டோபர், 2012

சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே - அழைப்பிதழ்

“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” விழா அழைப்பிதழ்




“ சிறுவர்களின் உலகம் சிறுவர்களுக்கே” என்னும் தொனிப் பொருளில் இம்முறை எமது பாடசாலை(பொல/ மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலய ) அதிபர், ஆசிரியர்கள் ஒழுங்கு செய்துள்ள “சிறுவர் தினக் கொண்டாட்டம்” எதிர்வரும் 03.10.2012 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்குப் பாடசாலை மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.


சனி, 15 செப்டம்பர், 2012

மன்னம்பிட்டி முதல் உகந்தை வரை

பாடசாலையின் இரண்டாம் தவணை விடுமுறையின் போது மன்னம்பிட்டியிலிருந்து உகந்த வரை (உகந்தை முருகன் ஆலயத்திற்குச்) செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

மன்னம்பிட்டியிருந்து பேரூந்தில் கல்முனை வரைச் சென்று அங்கிருந்து வாடகை வண்டியில் சென்றுவந்தேன்.

மன்னம்பிட்டியிலிருந்து அக்கரைப்பற்று பேருந்தில் காலை 5.45க்கு ஏறி 9.30க்கு கல்முனையை அடைந்தேன்.

(எமது பேரூந்துகளில்பயணம் செய்யத் தனித் திறமை வேண்டும். இது பற்றி இன்னமொரு பதிவில் எழுதவுள்ளேன்)

கல்முனையிலிருந்து உகந்தை ( இதனை சிங்கள மக்கள் ஒக்கந்தை என்று கூறுவர்) முருகன் ஆயலயத்திற்னான பயணம் தொடங்கியது. பயணத்தின் போது கிழக்குக் கடற்கரையின் அழகினை பார்த்துக் கொண்டே செல்லக் கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு ஊரிலும் மக்கள் தங்களுக்குரிய தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். மன்னம்பிட்டி முதல் பானமை வரை சாலை முற்றிலும் சீரமைக்கப்பட்டுக் காணப்பட்டது. ( ஆசியாவின் ஆச்சர்யம் ???) பானமை சென்றதும் எம்மை வரவேற்றது பானமைப் பிள்ளையார் ஆலயம்.


பானமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வெளித் தோற்றம்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம் - 2012


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

18.07.2012 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் தீர்த்தோற்சவத்தினை நடத்தி வைத்தார்கள்.







ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா ஐயா அவர்களுடன் மகாவலி கங்கையில் தீர்த்தம் ஆடுவதற்காக சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்களும், ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்களும் சென்று கொண்டிருக்கின்றனர்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள் திருவிழா


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள்  திருவிழா 2012.07.017 அன்று இரவு, வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


அவை தொடர்பான படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.