மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 நான்காம் நாள் ( 23.12.2014) |
Manampitiya Floods -December 2014 Fourth day ( 23.12.2014)
இன்று காலை வரை நீர் மட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆனால், மதியம் முதல் மீண்டும் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் வீடுகளுக்குத் திரும்பிய மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
பயணிகளின் வசதி கருதி இன்று மூன்று பெட்டிகளுடன் கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
இரயில் பாதையில் நடந்து செல்லுதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், புகையிரத நிலையத்தில் மக்கள் காத்திருந்து பயணம் செய்கின்றனர்.
இன்று மட்டக்களப்பிற்கான பஸ் வண்டிகள் மன்னம்பிட்டியிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. நகரம் வெறிச்சோடியே காணப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக