Pages

சனி, 15 செப்டம்பர், 2012

மன்னம்பிட்டி முதல் உகந்தை வரை

பாடசாலையின் இரண்டாம் தவணை விடுமுறையின் போது மன்னம்பிட்டியிலிருந்து உகந்த வரை (உகந்தை முருகன் ஆலயத்திற்குச்) செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

மன்னம்பிட்டியிருந்து பேரூந்தில் கல்முனை வரைச் சென்று அங்கிருந்து வாடகை வண்டியில் சென்றுவந்தேன்.

மன்னம்பிட்டியிலிருந்து அக்கரைப்பற்று பேருந்தில் காலை 5.45க்கு ஏறி 9.30க்கு கல்முனையை அடைந்தேன்.

(எமது பேரூந்துகளில்பயணம் செய்யத் தனித் திறமை வேண்டும். இது பற்றி இன்னமொரு பதிவில் எழுதவுள்ளேன்)

கல்முனையிலிருந்து உகந்தை ( இதனை சிங்கள மக்கள் ஒக்கந்தை என்று கூறுவர்) முருகன் ஆயலயத்திற்னான பயணம் தொடங்கியது. பயணத்தின் போது கிழக்குக் கடற்கரையின் அழகினை பார்த்துக் கொண்டே செல்லக் கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு ஊரிலும் மக்கள் தங்களுக்குரிய தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். மன்னம்பிட்டி முதல் பானமை வரை சாலை முற்றிலும் சீரமைக்கப்பட்டுக் காணப்பட்டது. ( ஆசியாவின் ஆச்சர்யம் ???) பானமை சென்றதும் எம்மை வரவேற்றது பானமைப் பிள்ளையார் ஆலயம்.


பானமை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வெளித் தோற்றம்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம் - 2012


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

18.07.2012 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் தீர்த்தோற்சவத்தினை நடத்தி வைத்தார்கள்.







ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா ஐயா அவர்களுடன் மகாவலி கங்கையில் தீர்த்தம் ஆடுவதற்காக சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்களும், ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்களும் சென்று கொண்டிருக்கின்றனர்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள் திருவிழா


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள்  திருவிழா 2012.07.017 அன்று இரவு, வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


அவை தொடர்பான படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.




வியாழன், 26 ஜூலை, 2012

ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவ பகல் திருவிழா


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள் பகல் திருவிழா 2012.07.017 அன்று பகல், வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.



ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் கொடிமர வழிபாட்டுடன் பகல் திருவிழாவினை ஆரம்பித்து வைக்கின்றார்.






புதன், 25 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் சங்காபிசேகம்


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

17.07.2012 செவ்வாய்க்கிழமைசங்காபிசேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.



சங்காபிசேகம் தொடர்பான படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

செவ்வாய், 24 ஜூலை, 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

17.07.2012 செவ்வாய்க்கிழமை முதலி குடும்பத்தினால் வேட்டைத் திருவிழாவும்,பந்தற்காட்சித் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.





வெள்ளி, 20 ஜூலை, 2012

வெள்ளிக் கம்பி வேலி


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத தேவஸ்தானதிற்கு வெள்ளிக் கம்பி வேலி ஒன்றினை, மன்னம்பிட்டடியில் வாழ்ந்து மறைந்த அதிபர் அமரர்.ச.சிமியோன் அவர்களின் ஞபகார்த்தமாக திரு.மு.உதயகுமார் (மருமகன்) குடும்பத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர்.



வெள்ளிக் கம்பி வேலி அமைத்தல் தொடர்பான படங்கள் கீழே உள்ளன

வெள்ளிக் கம்பி வேலியினை “காலித் நிறுவன ஊழியர்கள்” அமைத்துக் கொண்டிருக்கின்றனர்- 01