புகையிரத நிலையம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ( மேல் உள்ள் காடிணாளியைப் பாருங்கள் )
வீதிப் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நகரில் காணப்படும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது.
இரவு தொடர்ச்சியாக மழை பெய்யதாலும், பல அணைக்கட்டுக்களின் மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாலும் மன்னம்பிட்டியில் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
மன்னம்பிட்டி நகரின் ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- மட்டக்களப்ப வீதி )
மன்னம்பிட்டி நகரின் ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- மட்டக்களப்ப வீதி )
மன்னம்பிட்டி நகரின் ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- பொலன்னறுவை வீதி )
மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் புகையிரதம் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெருமளவானோர் பயணத்தைத் தவிர்து வீடுகளில் இருப்பதால் மன்னம்பிட்டி நகரம் வெறிச்சோடியே காணப்படுகின்றது.
வெறிச்சோடிக் காணப்படும் மன்னம்பிட்டி நகரம்
காலையில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் யுவதிகள் வேலைக்குச் செல்லமுடியாமல் நகரில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
பல வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பாதிக்கப்பட்டோர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளைத் தோணிகளில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
மன்னம்பிட்டி பள்ளிவாசல் நீரில் மூழ்கியுள்ளது.
மன்னம்பிட்டி நகரில் காணப்படும் புகையிரதப் பாதை நீரில் மூழ்கியுள்ளது.
இன்று மாலையும் நீர் வரத்து அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் மின் இணைப்புக்கள் இன்னும் துண்டிக்கப்படவில்லை. அதனால், வெகு விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் காணப்டுகின்றது.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 01
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 02
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 03
பழைய ஊருக்குச் செல்லும் வீதி நீரால் மூடப்படட்டுக் கொண்டிருக்கும் காட்சி.
தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 ஆறாம் நாள் ( 25.12.2014) |
Manampitiya Floods -December 2014 Sixth Day ( 25.12.2014)
இன்று நீர் மட்டம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்திருநதனர். ஆனால், இன்று மதியம் முதல் நீர்மட்டம் வெனகு விரைவாக அதிகரிப்பதனைக் காணக் கூடியதாக இருந்துது.
வெள்ளம் தொடர்பான காணொளியைப் பார்க்க.....
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 பகுதி I | Manampitiya Floods Part- I
இன்றுடன் ஆறாம் நாளாக வெள்ளம் காணப்பட்டாலும், இன்று நீர் மட்டம் வெகு விரைவாக அதிகரிப்பதனால், இன்னும் பல குடும்பங்கள் அகதிகளாக இடம் பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது.
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 ஐந்தாம் நாள் ( 24.12.2014) | Manampitiya Floods -December 2014 FifthDay ( 24.12.2014)
இன்று நீர் மட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆனால், வீதிப் போக்குவரத்திற்கு ஏற்ற அளவு நீர் மட்டம் குறையாததால் இன்றும் வீதிப் போக்குவரத்து முன்றிலும் இடம் பெறவில்லை.
பயணிகளின் வசதி கருதி இன்று ஐந்து பெட்டிகளுடன் கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
ஆனால், மன்னம்பிட்டி முதல் மட்டக்ளப்பு, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய இடங்களுக்கு பஸ்வண்டிகள் புறப்பட்டுச் சென்றன.
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 நான்காம் நாள் ( 23.12.2014) |
Manampitiya Floods -December 2014 Fourth day ( 23.12.2014)
இன்று காலை வரை நீர் மட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆனால், மதியம் முதல் மீண்டும் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் வீடுகளுக்குத் திரும்பிய மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
பயணிகளின் வசதி கருதி இன்று மூன்று பெட்டிகளுடன் கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
இரயில் பாதையில் நடந்து செல்லுதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், புகையிரத நிலையத்தில் மக்கள் காத்திருந்து பயணம் செய்கின்றனர்.
இன்று மட்டக்களப்பிற்கான பஸ் வண்டிகள் மன்னம்பிட்டியிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. நகரம் வெறிச்சோடியே காணப்பட்டது.