Pages

சனி, 27 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014




மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  எட்டாம்  நாள் ( 27.12.2014) |
Manampitiya Floods -December 2014  Eight  Day ( 27.12.2014)

மன்ன்னம்பிட்டியில் இன்று வெள்ளம் மிக அதிகமாக் காணப்படுகின்றது. நகர் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது.
 
இன்று காலையில் மன்னம்பிட்டி நகரினைப் பாருங்கள்......
 
 
 
 
புகையிரத நிலையம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது. (  மேல் உள்ள் காடிணாளியைப் பாருங்கள் )

வீதிப் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  நகரில் காணப்படும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது.

 

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஏழாம்  நாள் ( 26.12.2014) |
Manampitiya Floods -December 2014  Seventh  Day ( 26.12.2014)


 மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  II  | Manampitiya Floods   Part- II

மன்னம்பிட்டி மகாவலி கங்கை முதல் கல்லலை வரை காணொளியைப் பாருங்கள்.......


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  II  | Manampitiya Floods   Part- II
இணைப்பு:  https://www.youtube.com/watch?v=3o_4LxcwMVM



இரவு தொடர்ச்சியாக மழை பெய்யதாலும், பல அணைக்கட்டுக்களின் மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாலும் மன்னம்பிட்டியில் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

 
 
 
மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- மட்டக்களப்ப வீதி )

 
 
மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- மட்டக்களப்ப வீதி )
 
 
மன்னம்பிட்டி நகரின்  ஒரு பகுதி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
( மன்னம்பிட்டி- பொலன்னறுவை வீதி )


 
மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் புகையிரதம் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளது.  ஆனால், பெருமளவானோர் பயணத்தைத் தவிர்து வீடுகளில் இருப்பதால் மன்னம்பிட்டி நகரம் வெறிச்சோடியே காணப்படுகின்றது.
 
 
வெறிச்சோடிக் காணப்படும் மன்னம்பிட்டி நகரம்

 
காலையில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் யுவதிகள் வேலைக்குச் செல்லமுடியாமல் நகரில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
 
 
 
பல வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பாதிக்கப்பட்டோர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளைத் தோணிகளில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
 
 
மன்னம்பிட்டி பள்ளிவாசல் நீரில் மூழ்கியுள்ளது.


 


மன்னம்பிட்டி நகரில் காணப்படும் புகையிரதப் பாதை நீரில் மூழ்கியுள்ளது.
 
 
 
இன்று மாலையும் நீர் வரத்து அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் மின் இணைப்புக்கள் இன்னும் துண்டிக்கப்படவில்லை. அதனால்,  வெகு விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் காணப்டுகின்றது.  




 
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 01

 
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 02

 
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள் - 03

 
பழைய ஊருக்குச் செல்லும் வீதி நீரால் மூடப்படட்டுக் கொண்டிருக்கும் காட்சி.
 
தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள்  இடம் பெயர்ந்து  கொண்டிருக்கின்றனர்.
 
 
 

வியாழன், 25 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஆறாம்  நாள் ( 25.12.2014) |
Manampitiya Floods -December 2014  Sixth Day ( 25.12.2014)


இன்று நீர் மட்டம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்திருநதனர். ஆனால், இன்று மதியம் முதல் நீர்மட்டம் வெனகு விரைவாக அதிகரிப்பதனைக் காணக் கூடியதாக இருந்துது.

வெள்ளம் தொடர்பான காணொளியைப் பார்க்க.....



மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  I  | Manampitiya Floods   Part- I

இன்றுடன் ஆறாம் நாளாக வெள்ளம் காணப்பட்டாலும், இன்று நீர் மட்டம் வெகு விரைவாக அதிகரிப்பதனால், இன்னும் பல குடும்பங்கள் அகதிகளாக இடம் பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது.



 

புதன், 24 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஐந்தாம் நாள் ( 24.12.2014) |
Manampitiya Floods -December 2014  Fifth Day ( 24.12.2014)

இன்று  நீர் மட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆனால், வீதிப் போக்குவரத்திற்கு ஏற்ற அளவு நீர் மட்டம் குறையாததால் இன்றும் வீதிப் போக்குவரத்து முன்றிலும் இடம் பெறவில்லை.

பயணிகளின் வசதி கருதி இன்று ஐந்து  பெட்டிகளுடன்  கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.

ஆனால், மன்னம்பிட்டி முதல்  மட்டக்ளப்பு, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய இடங்களுக்கு  பஸ்வண்டிகள்  புறப்பட்டுச் சென்றன.

 

செவ்வாய், 23 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014



மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  நான்காம் நாள் ( 23.12.2014) |
Manampitiya Floods -December 2014  Fourth day ( 23.12.2014)

இன்று காலை வரை நீர் மட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆனால், மதியம் முதல் மீண்டும் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் வீடுகளுக்குத் திரும்பிய மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.


பயணிகளின் வசதி கருதி இன்று மூன்று பெட்டிகளுடன்  கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
 
இரயில் பாதையில் நடந்து செல்லுதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், புகையிரத நிலையத்தில் மக்கள்  காத்திருந்து பயணம் செய்கின்றனர். 
 
இன்று மட்டக்களப்பிற்கான பஸ் வண்டிகள் மன்னம்பிட்டியிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.  நகரம் வெறிச்சோடியே காணப்பட்டது.
 
 

 
 

திங்கள், 22 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014



மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  மூன்றாம் நாள் ( 22.12.2014) |
Manampitiya Floods -December 2014 Third  day ( 22.12.2014)


இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யதால்   இன்றும் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.




பயணிகளின் வசதி கருதி இன்று மூன்று பெட்டிகளுடன்  கூடிய இரயில் மன்னம்பிட்டிக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.



நேற்றம் இன்றும்  வெள்ளம் 01  
( மன்னம்பிட்டி  - பொலன்னறுவை வீதி  ஏ 11 வீதியின்  82 வது கிலோமீற்றர் கல் )


நேற்றம் இன்றும்  வெள்ளம் 02

 ( மன்னம்பிட்டி  -  மட்டக்களப்பு வீதி,  ஏ 11 வீதியின்  83 வது கிலோமீற்றர் கல் )


எனினும்,  இன்று மாலை தொடர்ந்து  மழை பெய்து கொண்டிருப்பதால்  நீர் மட்டம் மிக மெதுவாகவே குறைவதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்  தெரிவித்தனர்.
 
 


 

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014


மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  இரண்டாம் நாள் ( 21.12.2014) |
Manampitiya Floods -December 2014 Second day ( 21.12.2014)

நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யதால் நீர் வரத்து அதிகமாகியதால் இன்றும் மன்னம்பிட்டி முதல் கல்லலை வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.
 
 
தடைப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்திற்காக இரயில்பஸ் சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளது.
 
 
 
அவசர தேவைக்காகப் பயணம் செய்பவர்களே பயணம் செய்கின்றனர்.
 
 
நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
 
 
 
கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நலன்புரி நிலையங்ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை

 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்கள்

 
வெள்ளம் நேற்றும் இன்றும்  - 01
 
 
 
மன்னம்பிட்டியினூடாகப் பயணம் செய்பவர்கள் வேறு பாதையில் பயணத்தை மேற்கொள்வது நல்லது.