Pages

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கண்ணீர் அஞ்சலி

நம் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் எண்ணில் அடங்காதவை. கடும் காற்று, மழை காரணமாக மாத்தளை ரத்தோட்டையில் மரமொன்று வேனில் சரிந்து வீழ்ததில் உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் மன்னம்பிட்டியைச் சேர்ந்தவர்களே. 



இவ் விபத்தில் மூவர் மரணமடைந்தனர்.பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறைவனடி சேர்தவர்களின் ஆத்மா சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.



செவ்வாய், 18 டிசம்பர், 2012

மன்னம்பிட்டியில் வெள்ளம் (18.12.2012) Manampitiya Flood - 18.12.2012


மன்னம்பிட்டியில் வெள்ளம்  பகுதி - 2

 Manampitiya Flood  part - 2   (18.12.2012)


நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், அருகிலுள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் மன்னம்பிட்டி- பொலன்னறுவை ஆகிய நகர்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னம்பிட்டியிலிருந்து பொலன்னறுவை செல்ல புகையிரதத்தையே பலர் நம்பியிருந்தனர், புகையிரதப் பாதையில் வெள்ளம் பாய்ந்ததால் புகையிரதமும் நிறுத்தப்பட்டது. சிலர் புகையிரதப் பாதையில் நடந்து சென்றதைக் காண முடிந்தது.

 மழை தொடர்வதால் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.




மன்னம்பிட்டி கொட்டலிப் பாலத்தின் மேலோல் வெள்ளம் செல்லும் காட்சி


மன்னம்பிட்டியில் வெள்ளம் (17.12.2012) Manampitiya Flood - 17.12.2012

மன்னம்பிட்டியில் வெள்ளம்  பகுதி - 01
Manampitiya   Flood -   Part - 01                  (17.12.2012 )

இன்று  (17.12.2012)  மன்னம்பிட்டியில் நீர் மட்டம் உயர்ந்து  கொண்டு வருகின்றது.  நேற்றுடன் ஒப்பிடுகையில் புதிய பகுதிகளையும் வெள்ள நீர் தனதாக்கிக் கொண்டுள்ளது.  சிறிய வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இன்று ( 17.12.2012)  எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.



மெல்ல மெல்ல பொலன்னறுவை - மன்னம்பிட்டி பிரதான வீதியை வெள்ளம் மூடிக் கொண்டு வரும் காட்சி.